நெஞ்சை தொடும் ஈர வரிகள்.

Thursday, December 11, 2008

வெற்றி தோல்வி

நிம்மதி என்பது இல்லை

---------

தேடி தேடி அலைந்து கொண்டே போனால்
நிம்மதி என்பது இல்லை

பெட்டி நிறைய பணம் இருக்கும்
அவன் மனதில் நிம்மதி இல்லை
சட்டி நிறைய சாதம் இருக்கும்
அவன் வயிற்றில் பசி இல்லை
பார்க்கும் இடங்கள் எல்லாம்
மனை இருக்கும்
அங்கே இருப்பதற்கு மனிதர் இல்லை
இத்தனையும் இருக்கும் அவனிடம்
சொந்தம் இல்லை பந்தம் இல்லை
அன்பு இல்லை ஆதரிக்க ஆளும் இல்லை


சொல்லிவிடு
----
உன்னை நீ..மதிக்கத்தொடங்கு
அப்போதுதான் நீ..உயர்வாய்.
மனதில் பட்டதை சொல்லிவிடு
இல்லாவிடில் நீ.சொல்ல வந்ததை மற்றவர் சொல்லும் போது
கை கட்டி நின்று கேட்கநேரிடும்


வெற்றி தோல்வி
-------

வெற்றி பெற்றவன் நிமிர்ந்து விட
தோல்வியுற்றவன் பொறாமை கொள்கின்றான்
தோல்வியுற்றவன் நிமிர்ந்துவிட
வெற்றிபெற்றவன் தட்டிக்கொடுக்கின்றான் .

கொடுத்ததை நினைப்பதை விட
பெற்றதை நினைப்பது சிறந்தது

இறைவன் இருக்கும் இடமே
துன்பங்களையும் துயரங்களையும்
மறக்கச்செய்யும் இடம்

2 Comments:

  • "தேடி தேடி அலைந்து கொண்டே போனால் நிம்மதி என்பது இல்லை"
    100000% truth

    By Blogger N A V ! N, at 10:07 AM  

  • nanri

    By Blogger rahini, at 9:33 AM  

Post a Comment

<< Home