நெஞ்சை தொடும் ஈர வரிகள்.

Thursday, December 11, 2008

என்னை சுமக்கும் என்தாயே

என்னை சுமக்கும் என்தாயே
------------------
என் இதயத்தில் நிறைந்த
ஊற்றே
பாசத்தின் தாயே.
என்னை பெற்றெடுக்காமலே..
என்னை அன்பாக
அரவணைத்து
இனித்திடும் அன்பு
மொழி பேசி
என் குரல் தனை உங்கள்
செவிதனில் அருந்தி
என்னை பாடச்...சொல்லி
இன்பமாய் தூங்கும்
உங்களை எனக்கு
அம்மாவக தந்த
இறைவனுக்கு நன்றி
சொல்லித்தான் தீர்க்க
முடியுமா..?
இந்த உறவின் கடனை
நான் இப்பிறப்பில்
உதயத்தை காண்பேணா
என்று ஏங்கி உறங்கும்
நேரம் எல்லாம்
என் முன் உங்கள் முகம்
உதயமாய் தோண்றும்
போதெல்லாம்
இன்பமாய் எழுந்திடும்
நாட்களை தந்தன
உங்கள் அன்பு.
இதயத்துள் நிறைந்திட்ட
என் தாயே
இன்று என்ன
மாற்றம தந்தான்
இறைவன்
வாழ்க என் தாயே
நலமுடன்.

0 Comments:

Post a Comment

<< Home